Posts

Showing posts from November, 2021

கல்கோவில் புதுபொலிவிடன் ஜொலிப்பதால், மக்கள் உற்சாகம்

Image
         மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த கல்கோவில் அர்பணம்    சிறப்பாக நடைபெற்றது புதுபொலிவுடன் ஜொலிப்பதால் மக்கள் உற்சாகம்   நாகர்கோவில், நவ.29- மிகுந்த ஆவலுக்கு மத்தியில் கல்கோவில் அர்பணம் சிறப்பாக நடைபெற்றதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்மாதிரியான சபை நாகர்கோவிலின் மையம்பகுதியில் அமைந்துள்ள கல்கோவில் மிகவும் பழமையான பாரம்பரியத்தை கொண்டது. இது கிரேக்க வடிவமைப்பை கொண்டதும். மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் இருதயத்தில் ஒன்றோடு கலந்து விட்ட ஒரு  திருச்சபை ஆகும். பல மிஷனரிகள், போதகர்கள் மற்றும்  ஊழியக்காரர்களை உருவாக்கிய முன்மாதிரியான சபையாகும்  மறுசீரமைப்பு பணி கடந்த 2 வருடங்களாக இந்த திருச்சபையில் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வந்தது. இதனால் ஆலய ஆராதனைகள் ஆலன் கால் மண்டபத்தில் வைத்து நடைபெற்று வந்தது. மறுசீரமைப்பு பணிகளை  திருச்சபை போதகர் தலைமையில் சபைகுழு மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்துவந்தனர். புதுப்பொலிவுடன் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில். இதன் திறப்பு விழாவை பொதுமக்கள் மிகவும் ஆவ...

மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்ட கல்கோவில் நாளை திறப்பு

Image
மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்ட  கல்கோவில்  பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளை திறப்பு பொதுமக்கள் உற்சாகம் நாகர்கோவில், நவ 27-. கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து, புது பொலிவுடன் கல்கோவில் மீண்டும் திறக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளனர். நீண்ட பாரம்பரியம் ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக சி.எஸ்.ஐ, ஹோம் சர்ச் உள்ளது. I200 ஆண்டுகளாக மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளது.  இது 1819-ம் ஆண்டு புருஸ்ய நாட்டைச் சாாந்த வில்லியம் டோபியாஸ் ரிங்கல் தௌபே பிரபுவின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. இக்கட்டிடம் 140 அடி நீளமும், 70 அடி அகலமும் கொண்டு கிரேக்க பாணியில் கட்டப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் புராட்டஸ்டன்ட் தேவாலயங்களில் இது மிகப் பழமையானதும், மிகப்பெரியதும் ஆகும்.  பாராமரிப்பு பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக இந்த தேவாலயத்தில் மேற்கூரை  அமைப்பு மற்றும் வெளி  உட்புற சுவர்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பராமரிப்பு பணிகளை சபை போதகருடன் சேர்ந்து, சபைக்குழு மற்றும் பொதுமக்கள் மேற்கொண்...

தற்கொலையை ஆதரிக்காதீர்

Image
சும்மா தற்கொலை செய்கிறேன் என்கிற காலம் வரும் தற்கொலையை ஆதரிக்காதீர் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீற்வாகாது. கடந்த சில நாட்களாக  தமிழகத்தில் தற்கொலைகள்  அதிகரித்து உள்ளது எனபதே உண்மை.  தற்கொலை சம்பவங்களுக்கு சில ஊடகங்கள் முக்கியதுவம் கொடுப்பதே இதற்கு காரணம். ஏன் என்றால் கேட்கிற செய்திகள் தான் மனதில் பதிகிறது. இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல.  தற்கொலை சம்பந்தமாக செய்தியை ஒளிபரப்பும் மீடியாக்கள். அதில் இருந்து மீளுவது எப்படி என்பதையும் சுட்டிக்காட்ட தவறகூடாது. 

குமரி மாவட்டத்தில் தனியார் கல்வி நிருவனங்கள் அராஜகம்

Image
  கொரோனாவை காரணம் காட்டி தனியார் கல்வி நிருவனங்கள் அராஜகம் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு நாகர்கோவில், நவ.21- கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோவை காரணம் காட்டி தனியார்  கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளங்களை சரிவர கொடுக்காததால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொற்று முடிந்தும் முடியாத சோகம் கொரோனா தொற்றின் போது பொதுமுடக்கத்தால் பள்ளி கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது. இதை காரணம் காட்டி தனியார் நிருவனங்கள் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளத்தை  வெகுவாக குறைத்தனர். தற்போது நோய் தொற்று  குறைந்து  படிப்படியாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட தொடங்கினர். ஆனாலும் குறைக்கப்பட்ட சம்பளத்தையே நிறுவனங்கள் கொடுக்கின்றன. மேலும் பெரும்பாலான கல்வி நிருவனங்கள் 3  முதல் 5 மாதங்கள் சம்பள பாக்கியை  வைத்துள்ளனர். இதனல்  தொற்று முடிந்தும்,  முடியாத சோக கதையாக மாறியுள்ளன ஆசிரியர்களின்  வாழ்வாதாரம். அரசு நடவடிக்கை எடுக்குமா? கடந்த நாட்களில் சில ஆசிரியர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக...