கர்த்தர் ஒரு பாலூட்டும் தாயை பேன்றவர்
கடவுளின் குணம்: கடவுள் ஒரு பாலூட்டும் தாயை பேன்றவர் கடவுளை நாம் எந்த விதமாக புரிந்துக்கொள்கிறோம் என்பதை வைத்துதான் நம்முடைய வாழ்க்கை அமைகிறது. கடின பாடுகள், துன்பம் , வேதனை நிறைந்த வாழ்வின் மத்தியில் கடவுளின் குணநலன்களை அறிந்துக்கொள்வது உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க செய்யும். இரக்கம் உள்ளவர் வேதாகமத்தில் மிக முக்கியமான வசனங்களில் ஒன்று ‘யாத் 34:6 கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ளவர்.’ இதில் இரக்கம் என்கிற வார்த்தை ‘ rakhum ’ என்கிற மூலபாசையில் இருந்து வந்தது. இது பாலூட்டும் தாய் தன் குழந்தை மீது காட்டும் அக்கறையை குறிக்கிறது. எ:கா: இஸ்ரவேல் மக்கள் அடிமை தனத்தில் இருந்து அழுதபோது கர்த்தர் இரக்கம் கொண்டார். ஒரு பால் குடிக்கும் குழந்தை அழும்போது அதன் அம்மா எப்படி இரக்கம் கொண்டு அதற்கு பால் கொடுக்கிறாளோ அதேபோல் கர்த்தரின் பிள்ளைகள் அழும்போது அவர் இரக்கம் கொள்கிறார். இது தான் கடவுளின் குணம். எ:கா: இயேசு துன்ப படுகிறவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்கள் தேவைகளை சந்திப்பதை சுவிஷேச பகுதிகளில் நாம் காண்கின்றோம். நடைமுறை சாத்தியம் நாம் ...